வைரக் கற்களை திருடிச் சென்ற 3 பேர் கைது.

by Editor / 16-04-2022 10:06:13pm
வைரக் கற்களை திருடிச்  சென்ற 3 பேர் கைது.

மதுரை மாவட்டம் K.புதூரை சேர்ந்த முரளி(34), என்பவருக்கு  2017-ம் ஆண்டு  ஏற்பட்ட விபத்தின் காரணமாக நடக்க முடியாமல் தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே online-ல்   பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் முரளி  இரண்டு வைரக்கற்களை விற்பனை செய்ய online-ல்  விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிதம்பராபுரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (27),  என்பவர் வைரக் கற்களை வாங்கி கொள்வதாக கூறி போன் மூலம் முரளியை திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். முரளி அவரது நண்பர்களுடன் திருநெல்வேலிக்கு இன்று வந்ததும் அவர்களை முத்துகிருஷ்ணனின் கூட்டாளிகளான மஞ்சுவிளையை சேர்ந்த பால்சிம்சோன்(29), சுப்பிரமணியபுரத் தை மகேஷ்(32)  ஆகியோர் வாடகை கார் மூலம் சிதம்பராபுரம் அருகே அழைத்து சென்று அங்கிருந்து வைர கற்களை பிடுங்கி கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முரளி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் ஏர்வாடி காவல் ஆய்வாளர் (பொ) ஆதாம் அலி விசாரணை மேற்கொண்டு வழக்கின் எதிரியான முத்துகிருஷ்ணன், பால்சிம்சோன் மற்றும் மகேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் எதிரிகள் திருடிச் சென்ற  இரண்டு வைரக் கற்களையும்  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via