ஆளுநர் வருகையை எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்

by Staff / 20-04-2022 12:30:04pm
ஆளுநர் வருகையை எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம்

மயிலாடுதுறை வருகை தந்த தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய 89 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது .

மயிலாடுதுறையில் நேற்று ஆளுநர் ஆர் ரவி ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது மண் வன்மம் பந்தல் தனியார் கல்லூரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்த கருப்புக்கொடி பாதககைகளையும் வீசி எறிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

Tags :

Share via