சமையல் எண்ணெணெய் ஏற்றி வந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள ஆலம்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகரில் இருந்து நெல்லைக்கு சமையல் எண்ணெய் எற்றி சென்ற மினி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் மினி வேன் டிரைவர் முகம்மது ஆசாத், வேனில் உடன் வந்த இசக்கிமுத்து ஆகியோர் கயமடைந்தனர். போலீசார் விரைந்து கயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள சமையல் எண்ணெணெய் பாக்கெட்டிகள் சேதமடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்த மீட்டவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருகில் உள்ள மற்றொரு சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் சென்றன.
Tags :