120 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து

by Staff / 24-04-2022 02:55:07pm
120 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து

மத்திய தரைக்கடல் வழியாக 120 அகதிகளுடன் இத்தாலி நோக்கி சென்ற படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் பயணிக்கும் மக்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கி வாழ்வை இழக்கின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து 120 பேருடன் சென்ற 4 படகுகள் ஷபாஸ் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது 12 பேரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன10 பேரை  மீட்புக்குழு தேடி வருகிறது கடலில் தத்தளித்த 98 பேர்  துனிசியா கடற்படையினர்  மீட்டனர்.

 

Tags :

Share via