சிறுமியை கழுத்தைத் துண்டித்து கொலை - தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பு

by Editor / 26-04-2022 03:45:56pm
சிறுமியை கழுத்தைத் துண்டித்து கொலை - தூக்கு தண்டனை  வழங்கித் தீர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சுந்தர புரத்தைச் சேர்ந்த தினேஷ் குமார்இவரிடம்  கடந்த 2018 ம் பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நிலையில் அச்சிறுமி தன்னுடைய வீட்டில் கூறுவதாகக் கூறி வீட்டுக்கு செல்ல முயன்ற போது அந்த சிறுமியின் தலையை தனியாக துண்டித்து  கொலை செய்த வழக்கில் தினேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர் தினேஷ் குமார் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் நீதிபதி எம். முருகானந்தம் குற்றவாளி தினேஷ் குமார்க்கு தூக்கு தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.


 

 

Tags : Girl sentenced to death by beheading

Share via