3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை

by Editor / 09-05-2022 10:47:09pm
3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராக தடை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

 போலியான மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகளை தயாரித்தது தொடர்பான புகார் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொடர்புடைய ஆதிகேசவன், சதிஷ்குமார் ஆகியோர் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் எழிலரசன் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் வழக்கறிஞர்கள் நதியா, தினேஷ் பாபு ஆகியோரும் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், பட்டியலினத்தவருக்கு எதிரான புகார் வழக்கில் வழக்கறிஞர் முத்துராஜ் மற்றும் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் முருகையன் ஆகியோரும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 19 lawyers, including 3 female lawyers, were barred from appearing in court

Share via