அமைச்சர் பெரியகருப்பன் தாயார் காலமானார்

அமைச்சர் பெரியகருப்பன் தாயார் காலமானார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். இவரது தாயார் கருப்பாயி அம்மாள்(87), சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக, திருப்புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான அரளிக்கோட்டை கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Tags :