இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை

by Staff / 19-05-2022 01:05:49pm
இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை வருகிற 29-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொரோனா  காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காள தேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரயில் சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.டாக்காவில் இருந்து கொல்கத்தா டாக்கா  எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்கத்தாவில் இருந்து குர்ஆன் பந்தன் எக்ஸ்பிரஸ் வருகிற 29-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் என்.ஜே.பி  எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது.

 

Tags :

Share via