ஸ்ருதி ஷர்மா இந்த ஆண்டு ஐ .ஏ .ஸில் முதலிடம் பிடித்துள்ளார். UPSC முடிவுகள் 2022 நேரடி அறிவிப்புகள்
இந்திய குடிமைப்பணி தோ்வாணையம்[யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ] (UPSC) திங்களன்று -2021 இறுதி முடிவை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு UPSC தேர்வில் மொத்தம் 749 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஸ்ருதி ஷர்மா இந்த ஆண்டுமுதலிடம் பிடித்துள்ளார். அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். 126 விண்ணப்பதாரர்களின் யுபிஎஸ்சி முடிவுகள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட 80 வேட்பாளர்களின் விண்ணப்பம் தற்காலிகமானது.
இந்த ஆண்டு இந்திய நிர்வாகப் பணிகளுக்கு (ஐஏஎஸ்) 180 பேர், ஐபிஎஸ்ஸுக்கு 200 பேர், ஐஎஃப்எஸ்ஸுக்கு 37 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், குரூப் ஏ சேவைகளுக்கு 242 பேரும், குரூப் பி பிரிவுகளுக்கு 90 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களின் பட்டியல், அவர்களின் வாிசை எண்கள்;.
1 : ஷ்ருதி ஷர்மா.0803237
2 : அங்கிதா அகர்வால் 0611497
3 : காமினி சிங்லா 3524519
4 : ஐஸ்வர்யா வர்மா 5401266
5 : உத்கர்ஷ் திவேதி 0804881
6 : யக்ஷ் சௌத்ரி 0834409
7 : சம்யக் எஸ் ஜெயின் 0886777
8 : இஷிதா ரதி 0801479
9 : பிரீதம் குமார் 1118762
10 : ஹர்கீரத் சிங் ரந்தாவா 6301529
Tags :