ரூ. 1 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரம் நூல் மோசடி பல்லடம் அதிமுக நகர செயலாளர் கைது

by Editor / 05-06-2022 09:25:13am
 ரூ. 1 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரம் நூல் மோசடி பல்லடம் அதிமுக நகர செயலாளர் கைது

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் அசோக் ராம்குமார் இவர் திருப்பூர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது: பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி  நிட்டிங் நிறுவனத்தை பல்லடத்தில் நடத்தி வருகிறார். கடந்த 2021 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு ஆர்டர்களாக 1 லட்சம் கிலோ நூலை, துணியாக மாற்றி கொடுக்கும்படி கொடுத்தோம். ஆனால் நூலை பெற்றுக்கொண்டு ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்தார். இந்த நூலின் மதிப்பு ரூ. 1 கோடியே 21 லட்சத்து 66 ஆயிரம். இது குறித்து ராமமூர்த்தியிடம் கேட்டபோது, எங்களை மிரட்டுகிறார். இவ்வாறு அவரது புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமூர்த்தி மீதும், அவரது நிறுவன கணக்காளர் சங்கர் கணேஷ் என்பவர் மீதும் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை தேடிவந்த நிலையில் குற்றப்பிரிவு போலீசார் ராமமூர்த்தியை நேற்று கைது செய்தனர்.
 

 

Tags : Rs. 1 crore 21 lakh 66 thousand thread fraud Palladam AIADMK city secretary arrested

Share via