கள்ள உறவால் தாய், தங்கையை கொலை செய்த பெண் தலைமறைவு
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்துள்ள பதினெட்டாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் நீலாதேவி(47). இவரது இளைய மகள் அகிலாண்டேஸ்வரி(22). இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் டிஎஸ்பி சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனிடையே, சம்பவ இடத்திற்கு விரைந்தார் மதுரை மாவட்ட எஸ்பி சுஜித் குமார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நீலா தேவியின் மூத்த மகள் மகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்ததும் அவர் திருமணத்தை மீறி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அதற்கு இடையூறாக இருந்ததால் தாயையும் சகோதரியையும் தனது ஆண் நண்பர்களின் உதவியுடன் கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவான மகேஸ்வரியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, மகேஸ்வரியின் ஆண் நண்பர் சசிகுமார் என்பவர் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனிடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சசிகுமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags :