விசாரணை முடியும் வரை யாரிடமும் டெபாசிட்க்களை பெறக்கூடாதுஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

by Editor / 25-06-2022 04:12:05pm
விசாரணை முடியும் வரை யாரிடமும் டெபாசிட்க்களை பெறக்கூடாதுஆருத்ரா கோல்டு டிரேடிங்  நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை விசாரணை முடியும்வரை டெபாசிட்டுகளை பெறக்கூடாது எனஆருத்ரா கோல்டு டிரேடிங்   நிறுவனத்திற்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம். அனுமதி இன்றி இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என அதன் நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோருக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 1.678 கோடி ரூபாய் முதலீடுகளை பெற்று மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குனர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர் அதன் விசாரணையில் நிர்வாக இயக்குனர் உள்பட 5 பேரையும் கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி பணத்தை திருப்பி வழங்கியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 

Tags :

Share via