புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் படாததால் சர்ச்சை

by Editor / 25-06-2022 04:34:41pm
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் படாததால் சர்ச்சை

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச பொது சுகாதார பள்ளியை  மத்திய அமைச்சர் மன்சூர் மாண்டவிய திறந்து வைத்தார். விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்க பட்ட நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நிகழ்ச்சியின் நடுவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இனிவரும் காலங்களில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் என ஜிப்மர் இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

 

Tags :

Share via