இலங்கையில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு எரிபொருள் தட்டுப்பாட்டால் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

by Editor / 27-06-2022 12:15:36pm
இலங்கையில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு எரிபொருள் தட்டுப்பாட்டால்  வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள்

இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 470 ரூபாய் ஆகும் டீசல் விலை லிட்டர் 460 ரூபாயாக உயர்ந்துள்ளதால் டோக்கன் முறை அமல்படுத்தப்படுகிறது அன்னிய செலவாணி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளால் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் இலங்கையில் இரண்டு மாதங்களில் 3வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனிடையே சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

 

Tags :

Share via