கூலி தொழிலாளி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது

by Editor / 07-07-2022 05:03:33pm
கூலி தொழிலாளி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது

திருவண்ணாமலை அருகே செம்மரம் கடத்தல் வழக்கு பதிவு செய்வதாக கூறி கூலி தொழிலாளி மிரட்டி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவலர் கைது செய்யப்பட்டார் .ஜமுனா புறத்து காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலராக பணிபுரிந்து விஜய் என்பவர் திருவாரூரைச் சேர்ந்த செங்கல் சூளை கூலி தொழிலாளியான கோவிந்தராஜ் மிரட்டி ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் வாணாபுரம் காவல் நிலையத்திற்கு காவலர் விஜய பணி மாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பிய அதிகாரிகள் காவலர் விஜய் பெற்ற போது கையும் களவுமாக கைது செய்தனர்.

 

Tags :

Share via