குணமடைந்து விட்டேன் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் "குணமடைந்து விட்டேன் என்ற நல்ல செய்தியுடன், அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கானோர் என்னை தொடர்பு கொண்டு நலம்பெற வாழ்த்தினர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tags : My heartfelt thanks to all the good souls who have recovered - Chief Minister M.K.Stalin