பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டனர்

by Staff / 25-04-2022 01:00:52pm
பிரதமர் மஹிந்த ராஜபக்சே  பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டம் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டனர்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக கோரி ஆயிரக்கணக்கான மாணவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு பதவி விலக வேண்டுமென கோரி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை  தடுக்கும் விதமாக போலீசார் கொழும்பு நகரை சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகளை அமைத்து இருந்தனர். அதேபோல் மாணவர்களை பிரதமர் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். அவர்களை தள்ளிவிட்டு மாணவர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்றனர் மாணவர்களில் சிலர்  கோ ஹோம் கோடா என்ற பாதைகளை கைகளில் வைத்திருந்தனர். இதுகுறித்து இலங்கை போலீசார் கூறும்போது ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்த வளாகத்தில் இல்லை என்று தெரிவித்தனர்.

 

Tags :

Share via