ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை பகுதிகளுக்கும் தனியார் ரெயில் இயக்கம்..?

by Editor / 23-07-2022 07:58:26pm
ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை பகுதிகளுக்கும்  தனியார் ரெயில் இயக்கம்..?

மத்திய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் ரெயில் இயக்க ஒப்புதல் வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் 13ந் தேதி நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், ஆந்திரா, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு தனியார் ரயில் சவுத் ஸ்டார் என்ற நிறுவனம் வாயிலாக இயக்கப்பட்டது. பயணிகள் வரவேற்பை தொடர்ந்து மீண்டும் ஆகஸ்டு 5-ந்தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு ரெயில் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு www. southstarrail. com என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 1800 210 2991 என்ற எண்ணில் அழைக்கலாம்.  குறித்து ரயில்வே வணிக பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கோவை மட்டுமின்றி சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர், சபரிமலை உட்பட பகுதிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பாரத் கவுரவ் திட்டத்தில் தனியார் ரெயில் இயக்கப்பட உள்ளது.இதற்கான  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றனர்.

 

Tags : Private train operation for Rameswaram, Tiruchendur, Sabarimala areas..?

Share via