தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது

by Editor / 24-07-2022 07:47:47am
தமிழகம் முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக் கூடிய 7,301 குரூப்-4 இடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இதற்காக டி.என்.பி.எஸ்.சி. விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் ஆண்கள் 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 பேர், பெண்கள் 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

 

Tags : Group-4 examination is being held today across Tamil Nadu

Share via