ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு - இன்று விசாரணை

by Staff / 30-03-2023 12:02:35pm
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு - இன்று விசாரணை

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் தனிநீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி குமரேஷ்பாபு நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன்,வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via