பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார் - ராகுல் காந்தி

by Staff / 09-08-2023 12:57:44pm
பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார் - ராகுல் காந்தி

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 2வது நாள் விவாதம் இன்று நடைபெறுகிறது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணியளவில் தொடங்கிய மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி எம்.பி, “பிரதமர் விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார். 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அவதூறுகள், விமர்சனங்களால் தாக்கப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via