ரயில்வே சொத்து மக்களுக்கானது - சாலமன் பாப்பையா

by Staff / 15-11-2023 01:34:50pm
ரயில்வே சொத்து மக்களுக்கானது - சாலமன் பாப்பையா

மதுரை அரசரடியிஸ் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து கடந்த வாரம் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில், இந்த திட்டத்திற்கு கையெழுத்திட்ட தமிழறிஞர் சாலமன் பாப்பையா, "ரயில்வே சொத்து தனியாருக்கு அல்ல, மக்களுக்கானது. போகிற போக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்க கூடாது" என வேதனையுடன் தெரிவித்தார்.

 

Tags :

Share via