கேரளாவில்7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை-படகுகவிழ்ந்து ஒருவர் உயிர் தப்பினார்.

by Editor / 02-08-2022 12:35:02pm
கேரளாவில்7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை-படகுகவிழ்ந்து ஒருவர் உயிர் தப்பினார்.

கேரளாவில் 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் 2 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.மேலும் கொல்லம் நீண்டகாரா பகுதியில் கடலில் ஏற்பட்ட சூறாவளிக்காற்றினால் படகு கடலில் கவிழ்ந்தது.இதில் படகில்  மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 4பேரில் கெல்காத்தாவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் மட்டும்  கடலில் விழுந்தார்.அவரை  மற்றொரு படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றினர்.

கேரளாவில்7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை-படகுகவிழ்ந்து ஒருவர் உயிர் தப்பினார்.
 

Tags : Red alert alert in 7 districts in Kerala-boat capsizes, one survives

Share via