இயக்குனர் சங்கர் படத்தில் சூர்யா !
விருமன் இசை வெளியீட்டு விழா மதுரையில் அண்மையில் நடந்தது. விழாவிற்கு இயக்குனர் பாரதிராஜா,நடிகர் சூர்யா,நடிகர் கார்த்தி,நடிகை அதிதி சங்கர்,இயக்குனர் சங்கர்.,இயக்குனர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர் டெயின்மெண்ட் தயாரிக்கிறது
.இவ்விழாவில் பேசிய பாரதிராஜா.சூர்யாவை.,கார்த்தியை பல நிலைகளில் புகழ்தார். அடுத்த தேசிய விருதை கார்த்திக் பெற வேண்டும் என்று வாழ்த்தினார். இப்படத்தின் கதாநாயகி அதிதி அழகு,முகக்கட்டு என எல்லா அம்சங்களும் பொருந்தியவர் என்றும்
பாராட்டினார்.
பாராட்டினார்.
யுவன் சங்கர் ராஜா கஞ்சா பூ கண்ணாலே பாடலை ..பாடி..தன்க்கு அதிகம்..பேச வராது என்றும் இசையால் தான் எனக்கு இந்த பெருமை என்றுன் கூறினார்.இயக்குனர் சங்கர் ட்ரைலர் படத்தின் வெற்றியைச்சொல்வதாகச்சொன்னார்.
சூர்யா தம் மணிக்கட்டை காட்டி ..உங்களால் தான் இந்த ரோலக்ஸ் வாட்ச் கமல் சார் தந்தார் என்று பெருமை பொங்க சொன்னார். இவ்விழாவின் மூலம் இயக்குனர் சங்கர் படத்தில் இதுவரை சூர்யா நடிக்க வில்லை. அடுத்த படத்தில் இருவரும் இணைய இருப்பதாக தகவல். எது எப்படியோ...அடுத்த படம் ...வணங்கான் .,வாடிவாசலுக்கு பின் சங்கர் படம் தானே..
Tags :