தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

by Editor / 13-11-2022 09:11:34am
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, மதுரை, தருமபுரி, நாமக்கல் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via