சுதந்திர நாள் கொண்டாட்டம் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்தியா பாகிஸ்தான் நாட்டு வீரர்கள்

by Editor / 14-08-2022 04:10:51pm
சுதந்திர நாள் கொண்டாட்டம் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்தியா பாகிஸ்தான் நாட்டு வீரர்கள்

நாட்டு விடுதலையின் 75ஆம் ஆண்டு விழாவையொட்டி பஞ்சாப் மாநில அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பாகிஸ்தானின் சுதந்திர நாள் இன்று இந்தியாவின் சுதந்திர நாள் நாளையும் கொண்டாடப்படும் நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக இருநாட்டு வீரர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

 

Tags :

Share via