தலையில்லாமல் இருக்கும் முருகன் சிலை சரிசெய்ய வேண்டுகோள்
பகவான் முருகன் தான் சூரன் தலையை கொய்து சம்ஹாரம் செய்ததாக கந்த சஷ்டி விழாவில் காண்கிறோம்.தென்காசி அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோவில் உலகம்மன் சன்னதி முகப்பு மண்டபம் நுழைவு பகுதியில் உள்ள முருகன் சிலை சேதமடைந்து இருக்கிறது.கோவிலின் முதல் கும்பாபிஷேகம் 1990 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கும்பாபிஷேகம் 2006 லும் நடந்திருக்கிறது.விரைவில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags :