92 நாடுகளில் 35 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

by Editor / 18-08-2022 11:53:11am
92 நாடுகளில் 35 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35 ஆயிரம் பேருக்கு குரங்கு அமைப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு வாரங்களில் நோய்த்தொற்று 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் ரெட்ராஸ் அதனம்  நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மேலும் பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via