மாநிலங்கள் தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்- அமித்ஷா

by Editor / 19-08-2022 12:11:19pm
மாநிலங்கள் தேசிய பாதுகாப்பு பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்- அமித்ஷா

டெல்லியில் தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். அண்டை நாடுகளுடனான நமது எல்லைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றங்கள் நடைபெறுகின்றன. இது குறித்த தகவல்களை சேகரிப்பது மாநில காவல்துறை தலைவா்களின் பொறுப்பு. ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் வெற்றியை பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும், தொழில் நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கும் சம அளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். என அமித்ஷா தெரிவித்தார்.

 

Tags :

Share via