கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது.

by Editor / 20-08-2022 11:23:47pm
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது.

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த வென்றிலிங்கபுரத்தை சேர்ந்தவர் நிதிநிறுவன ஊழியர் வைரவசாமி இவருக்கும், சுரண்டையை அடுத்த வீரசிகாமணியை சேர்ந்த முத்துமாரி (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.வைரவசாமி வீரசிகாமணி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் அவரது மனைவி முத்துமாரியும் பணியாற்றி வருகிறார்.நேற்று இரவு பணி முடிந்து கணவன்-மனைவி மோட்டார் சைக்கிளில் வென்றிலிங்கபுரத்திற்கு சென்றனர்.அப்போது பின்னால் காரில் வந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்னர் முத்துமாரி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர்.உடனே வைரவசாமி அதனை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று கல்லால் சரமாரியாக தாக்கினர்.இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் முத்துமாரியை தாக்கிவிட்டு அவரிடம் இருந்த நகையை பறிக்காமல்  தப்பிச் சென்றுவிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சேர்ந்தமரம் ஆய்வாளர் விஜயகுமார்,சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் சென்று வைரவசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வைரவசாமியை கொலை செய்த கும்பல் யார்? நகை பறிப்பதை தடுத்த போது தான் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி னர்.இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.அதில் வைரசாமி மனைவி முத்துமாரிக்கு திருமணத்திற்கு முன்னபாகவே ஒருநபருடன் தொடர்பு இருந்ததும் கணவர் அடிக்கடி சண்டை போடுவதால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரியவரவே மனைவி முத்துமாரியை போலீசார் கைது செய்தனர்.கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட 3பேர் தலை மறைவாகிவிட்டனர்.அவர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற மனைவி கைது.
 

Tags :

Share via