விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மீட்பு பணி ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்

by Editor / 21-08-2022 12:31:38pm
விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்த மீட்பு பணி ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்

தென்கிழக்கு துருக்கியில் சாலை விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மீட்பு பணி ஊழியர்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.காஜியான்டெப்  நகர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்து நிகழ்ந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது மோதி சாலையோரம் கவிழ்ந்தது.இதில்  16 அவசரகால சுகாதார ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் உட்பட இரு விபத்துக்களையும் சேர்த்து 32 பேர் உயிரிழந்த நிலையில் 29 பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via