ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுமியை சீரழித்த கும்பல்.

by Editor / 03-09-2022 07:45:39pm
ஊர்வலத்தை வேடிக்கை பார்க்க சென்ற சிறுமியை சீரழித்த கும்பல்.

திருப்பதி மாவட்டம், எம்மிராஜுலா கண்ட்ரிகா பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை  அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி வேடிக்கை பார்க்க சென்றுள்ளார். ஆனால் ஊர்வலம் முடிந்த பிறகு சிறுமி வீடு திரும்பவில்லை. சுமார் 3 மணி நேரம் கழித்து சிறுமி துணிகள் கிழிந்து உடலில் பல இடங்களில் ரத்தக்காயத்துடன் வீடு வந்து சேர்ந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கேட்டபோது தன்னை சிலர் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதார். உடனே அவரது பெற்றோர் கே.வி.புரம் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், ஊர்வலத்தில் 3 பேர் கும்பல் சிறுமிக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை ஆட்டோவில் தூக்கிபோட்டு கடத்திச்சென்றுள்ளனர். பின்னர் மறைவான இடத்தில் வைத்து 3 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு ஆட்டோவில் வீட்டின் அருகே சிறுமியை இறக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். பலாத்காரம் செய்தவர்களில் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்தவர்  என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via