ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. கட்சி வலுவாக உள்ளது.வைகோ விளக்கம்

by Editor / 22-10-2021 05:23:15pm
ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. கட்சி வலுவாக உள்ளது.வைகோ விளக்கம்

மதுரை விமான நிலையம் வந்த வைகோ, மகனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது, கட்சிக்குள் சிலர் அதிருப்தி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, எனது மகன் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கியதால் எதிர்ப்புகள் வந்துள்ளது என்பது அப்பட்டமான பொய். நேரடியாக தேர்வு செய்ய பொதுச்செயலாளருக்கு அதிகாரம் இருந்தும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியே தேர்வு செய்யப்பட்டார்.

தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை வரவேற்று மாவட்ட செயலாளர்கள் அவருக்கு உரிய பதவியை அளிக்க வேண்டும் என்று கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் துரை வைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். அரசியல் ஒரு சூழல். இதில் மாட்டிக்கொண்டால் நிறைய பிரச்சனைகள் வரும். நிம்மதி இருக்காது என்று அவருக்கு பல முறை அறிவுரை கூறினேன். துரை வையாபுரிக்கு தகுதி வந்துவிட்டது. மேடையிலும் நன்றாக பேசுகிறார், பேட்டியிலும் நன்றாக பேசுகிறார். அவருடைய பேட்டியைப் பார்த்து விட்டு முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி அருமையான தலைவர் உருவாகி வந்துள்ளார் என்று சொன்னார்.


துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டதால் ம.தி.மு.க.வில் இருந்து ஒரு சிலர் வெளியேறி உள்ளார்கள். அது கட்சிக்கு நல்லதாக முடியும். ம.தி.மு.க.வில் எந்த குழப்பமும் இல்லை. கட்சி வலுவாக உள்ளது. ம.தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், என்னால் தொடர்ந்து போக முடியாததால் விலகிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, வேறு எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை, என அவர் கூறினார்.

 

Tags :

Share via