இந்திய ஒற்றுமை பயண தொடக்க விழா
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திகன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரையாக செல்லும் இந்திய ஒற்றுமை பயண தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் கன்னியாகுமரி, காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள் .ராகுல்காந்தி தம் தந்தையின் நினைவிடத்திற்கு சென்ற பின்பு ட்விட்டாில் இவ்வாறு பதிவிட்டிருந்தாா்
வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன். அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன்.
அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக, நாம் வெல்வோம்.
இரண்டாவது நாளாக இன்று,கன்னியா குமரியிலிருந்து அகஸ்தீஸ்வரம் வழியாக தம் பயணத்தை தொடர்கிறார்,ராகுல் காந்தி 150 நாட்கள் 36 மாநிலங்களுக்கச்சென்று இறுதியாக ஜம்மு காஷ்மீரில் பயணத்தை முடிக்கிறார்.
Tags :