சமூக வலைதளத்தை இளைஞர்கள் நேர்மையாக பயன்படுத்த வேண்டும்: கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
இந்தியத் தொழில் கூட்டமைப்பின் புதுவைகிளை மற்றும் ஈடன் பவர் குவாலிட்டி நிறுவனம் சார்பில் புதுவையில் தனியார் ஓட்டலில் நடந்த உணவு அலங்காரப் போட்டியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.
இளைஞர்கள் சமூக வலைதளத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும். தாய் தந்தையை மதிக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை. இலக்கை குறிவைத்து பயணம் செய்ய வேண்டும். முயற்சி செய்து இலக்கை அடைய வேண்டும். இவ்வாறு கவர்னர் தமிழிசை பேசினார்.
Tags :