சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரித்த கொடுமை

by Staff / 12-09-2022 01:48:27pm
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீவைத்து எரித்த கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவர் சிறுமி அப்பகுதியில் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் பள்ளிக்கு சென்று வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கிண்டல் செய்தும், பாலியல் ரீதியாக தொல்லை தந்துள்ளனர். இதனிடையே, கடந்த 2ம் தேதி பள்ளியை விட்டு வரும் போது அந்த இளைஞர்கள் வழக்கம் போல அவரை கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, அந்த இளைஞர்களில் ஒருவரான தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்கள் அவரை 'பெண்ணிடம் அறை வாங்கியவன்' எனக் கூறி கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதனால் அவமானமடைந்த அந்த இளைஞர், சிறுமியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில், தினேஷும் அவரது நண்பனும் சேர்ந்து சிறுமியின் வாயில் துணியை கட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் பெட்ரோலை ஊற்றி தீயை பத்தவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இதற்கு காரணமான இருவரை சிறுமி அளித்த புகாரின் படி போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via