சமூக ஒடுக்குமுறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ஐ.ஜி.ஆஸ்ரா கார்க் தகவல்

by Editor / 18-09-2022 11:02:11am
சமூக ஒடுக்குமுறையை தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை- ஐ.ஜி.ஆஸ்ரா கார்க் தகவல்

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்ய மறுத்து தீண்டாமை விவகாரத்தில் எஸ்.சி எஸ்.டி. சட்டத்தின் முக்கிய பிரிவை பயன்படுத்த முடிவு.பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களை புரியும் குற்றவாளிகளை சில காலங்களுக்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்ற கூடிய சட்ட பிரிவு (Externment provision) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளது.சமூக ஒடுக்குமுறையை தடுக்கவும், தொடர்ந்து பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சட்டப்பிரிவை இவ்வழக்கில் பயன்படுத்த உள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தகவல்.
 

 

Tags :

Share via