சாண்ட்விட்ச் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

by Staff / 26-09-2022 04:35:21pm
சாண்ட்விட்ச் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கோட்டை மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சாலமன்(38). இவர் அதே பகுதியில் தேவ ஆலயம் ஒன்று நிறுவி ஊழியம் செய்து வருகிறார். இவரது மனைவி ரூபி (34). இவர்களது மகன் ரூபன்(7). கடந்த சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், திண்டிவனத்தில் இருந்து ஜான்சன் (9)சைமன் (10)ஆகியோர் சாலமன் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை ராஜேஸ்வரி திரையரங்கம் எதிரே உள்ள ரஷீத் கேண்டீனுக்கு சாலமன், ரூபியும் குழந்தைகளுடன் சாப்பிட சென்றனர்.

அப்போது, அந்த கேண்டீனில் ஜான்சன், சைமன், ரூபன் ஆகிய மூவரும் சாண்ட்விட்ச் சாப்பிட்டனர். இதை சாப்பிட்ட சிறுவர்களுக்கு சிறிது நேரத்திலேயே  வாந்தி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், அவர்களை ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புட் பாய்சன் என தெரிவித்தனர். உடல்நிலை மோசமான நிலையில் மேல்சிகிச்சைக்காக வேலூரில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பின்னர் உணவு பாதுகாப்பு துறை வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ரஷீத் கேண்டினில் தற்போது ஆய்வு செய்தபோது காலாவதியான பொருட்கள் சிக்கியது.

சாண்ட்விட்ச் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
 

Tags :

Share via