800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

by Staff / 15-05-2024 04:10:20pm
800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு

தடை செய்யப்பட்ட மீன்களை பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுர மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவகங்களில் இன்று(மே 15) ஆய்வு மேற்கொண்ட அவர்கள், விற்பனை செய்வதற்காக பிடிக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பறிமுதல் செய்தனர். இந்த மீனை உட்கொண்டால் கேன்சர், தோல் நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அத்தனை மீன்களையும் குழிதோண்டி உணவு பாதுகாப்புத் துறையினர் புதைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo