புகழேந்தி நீக்கம் ஆச்சர்யம்  அளிக்கிறது :  ஆதரவாளரிடம் பேசிய  சசிகலா 

by Editor / 15-06-2021 04:29:28pm
புகழேந்தி நீக்கம் ஆச்சர்யம்  அளிக்கிறது :  ஆதரவாளரிடம் பேசிய  சசிகலா 

 
கட்சிக்காக பாடுபட்ட புகழேந்தி  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சர்யம் அளிப்பதாக சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலாவிடம் பேசிய சிலரை ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அதிமுகவிலிருந்து செய்தி தொடர்பாளர் புகழேந்தி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.
இந்நிலையில், நெல்லையை சேர்ந்த பாரதி என்ற ஆதரவாளருடன் பேசிய சசிகலா, 'கட்சிக்காக பாடுபட்ட புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது ஆச்சர்யம் அளிப்பதாகவும், அதிமுகவை சரி செய்து கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே, தான் விரைவில் வந்துவிடுவதாகவும் பாரதி என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via