மாமியாரை கொலை செய்த மருமகள்

by Staff / 16-10-2022 04:32:29pm
மாமியாரை கொலை செய்த மருமகள்

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் ஸ்ரீ ராமாபுரம் என்கிற பகுதியில் வசித்து வந்தவர் ராணி. 76 வயதான இந்த மூதாட்டியின் மருமகள் சுகுணா. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக மூதாட்டி ராணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்து வந்த ஸ்ரீ ராமபுரா போலீசார் மூதாட்டியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசாருக்கு மருமகள் சுகுணா மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியிருக்கிறார். போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தியதில், மாமியாரை கொன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார் சுகுணா. சுகுணாவின் கணவருக்கு குடும்ப சொத்தை பிரித்துக் கொடுக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார் ராணி. இதனால் மாமியாரிடம் அடிக்கடி சொத்தை பிரித்து கொடுக்கச் சொல்லி கேட்டு தகராறு செய்திருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த மாமியார் அவரை கடுமையாக தாக்கியிருக்கிறார் . இதில் கழுத்தில் கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

 

Tags :

Share via