இளம்பெண்ணை.. 5 பேர் சேர்ந்து.பாலியல் வன்கொடுமை

by Staff / 19-10-2022 04:45:32pm
 இளம்பெண்ணை.. 5 பேர் சேர்ந்து.பாலியல் வன்கொடுமை

டெல்லியில் காசியாபாத் நகரில் இருந்து டெல்லியை இணைக்கும் பகுதியில் ஆசிரம சாலையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடக்கிறார் என போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் மறுத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு காசியாபாத் நகர போலீசார் அவரை கொண்டு சென்றனர். அதன்பின்பு, பெண்ணிடம் இருந்து வாக்குமூலம் பெற்றனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அந்த பெண் காசியாபாத் நகரில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கடந்த ஞாயிற்று கிழமை டெல்லிக்கு திரும்பியுள்ளார். அவரது சகோதரர் பேருந்து நிலையம் ஒன்றில் பெண்ணை இறக்கி விட்டுள்ளார். பேருந்துக்காக காத்திருந்தபோது, அவரை கார் ஒன்று நெருங்கி நின்றுள்ளது. உள்ளே இருந்த 5 பேர் பெண்ணை இழுத்து காருக்குள் தூக்கி போட்டு கொண்டு பறந்தனர்.

அதன்பின், அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று, பெண்ணை 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்தும், சித்ரவதை செய்தும் உள்ளனர். இதன்பின்னரே, நேற்று அந்த பெண் ஆசிரம சாலையில் மயங்கிய நிலையில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.  இச்சம்பவம் குறித்து போலீசார் வழுக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via