மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

by Staff / 26-10-2022 05:27:44pm
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

கோவை மாவட்டம் போத்தனூர், சாரதா மில் ரோடு முதலியார் வீதியைச் சேர்ந்தவர் 62 வயதான விக்ரமன், இவரது மனைவி 58 வயதான சுசீலா, விக்ரமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது, தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார், இந்த நிலையில் நேற்று இரவு, சுசிலா தனது வீட்டை பூட்டிவிட்டு தூங்கியுள்ளார், அப்பொழுது குடிபோதையில் அங்கு வந்த விக்ரமன் கதவை தட்டி உள்ளார், மனைவி சுசிலா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை என கூறப்படுகின்றது, தொடர்ந்து தட்டிக் கொண்டு இருந்துள்ளார் விக்ரமன், நீண்ட நேரத்திற்கு பிறகு சுசிலா கதவை திறந்து உள்ளார், அப்பொழுது ஆத்திரமடைந்த விக்ரமன், மனைவி சுசீலாவை கத்தியால் குத்தியுள்ளார், இதில் சுசிலாவிற்க்கு, பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், இது குறித்து போத்தனூர் போலீசில் சுசிலா புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விக்ரமனை கைது செய்தனர் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via