ஒரு எருமை விலை 35 கோடி ரூபாய்.
ஐதராபாத்தில் ஆண்டுதோறும் யாதவ சமுதாயத்தை சேர்ந்தவர்களால் தீபாவளிக்கு மறுநாள் சதர் விழா நடத்தப்படுவது வழக்கம். இதில், விலை உயர்ந்த எருமை மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வருவார்கள். இந்த விழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், மது யாதவின் ‘கருடன்’ என்ற எருமை சிறப்பு கவனம் பெற்றது. 20 நாட்களுக்கு முன்பு அரியானாவில் இருந்து ஹைமத் ஆலம்கானிடம் இருந்து ரூ.35 கோடி கொடுத்து இந்த 4 வயதான கருடன் எருமையை சதர் விழாவில் யாதவ் வாங்கியுள்ளார்.
இதேபோல், அவரிடம் 10 எருமைகள் இருக்கிறது. இந்த எருமைகளின் விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கருடன் எருமையின் விந்தின் ஒரு துளி ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த எருமைகளுக்கு பால், பிஸ்தா, பாதாம், முந்திரி, ஆப்பிள், கோழி முட்டை, கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு, வெந்தய விதைகள், வேர்க்கடலை, குஜார், பீட்ரூட் ஆகியவைதான் உணவாக வழங்கப்படுகின்றது.
Tags :



















