யானையின் உடலில் தந்தம் திருட்டு- 3 குழந்தைகளுக்கு வனத்துறை சம்மன்-சமூக ஆர்வலர்கள் கடும் கண்டணம்.
கோவை தடாகம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறந்த நிலையில் யானையின் உடல் கிடந்தது. யானையின் உடலில் இருந்து வலது தந்தம் திருடப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் யானை தந்தம் மாயமான வழக்கில் 15 வயது,12 வயது,11 வயது உடைய மூன்று குழந்தைகளுக்கு கோவை வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 3 பேரும் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தங்களுக்குத் தெரிந்த விவரங்களையும், தகவல்களையும் தெரிவிக்குமாறு வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.கோவை மாவட்ட வனத்துறை இறந்த யானைகள் குறித்த வழக்கு விசாரணைக்கு குழந்தைகளை வனச்சரக அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரிப்பது என்பது சட்டவிரோத செயல் என்பது கூட தெரியாத வன அலுவலர்களை கொண்டு வனத்துறை செயல்படுவது வேதனைக்குரியது தண்டனைக்குரியது கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags :