திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலி... காதலன் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 31-10-2022 12:15:31pm
  திருமணம் செய்ய  மறுத்த கள்ளக்காதலி... காதலன்  தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து, ஒரு தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அம்மு (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த அம்மு கடந்த சில மாதங்களாக பரணிதரனுடன் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அம்முவை பரணிதரன் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால், இதற்கு அம்மு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த பணிதரன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரணிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via