பிரதமர்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளதை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்.

by Admin / 11-11-2022 06:59:54pm
பிரதமர்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை  செய்து தீர்ப்பளித்துள்ளதை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்.

முன்னாள் பாரதப் பிரதமர்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட.பேரறிவாளனை தொடர்ந்து, சுரேந்திர ராஜா என்கிற சாந்தன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 6 பேரையும்இன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இதன்மூலம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறது. இது அஇஅதிமுக இயக்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதனை அஇஅதிமுக சார்பில் வரவேற்கிறேன்ஒ.பன்னீர்செல்வம் ட்விட்.

 

Tags :

Share via