குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

by Staff / 12-11-2022 12:10:50pm
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

இரணியல் அருகே உள்ள மேல குருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் கணபதி மகன் நாராயணன் என்ற தாணிவேல் (வயது49),. இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள பாறைகுளம் அருகே இருந்துள்ளார். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.இதுகுறித்த தகவல் அறிந்த திங்கள்நகர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடினர். அவரை கண்டுபிடிக்க முடியாததால் இரவு பிளட் லைட்களை எரியவிட்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரவு சுமார் 8. 25 மணி அளவில் அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via