பணியின் போது உயிரிழந்த காவலரின் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்.

by Editor / 01-03-2023 11:02:24pm
பணியின் போது உயிரிழந்த காவலரின் உடல் மரியாதையுடன் நல்லடக்கம்.

தென்காசி மாவட்டம், குமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 43). இவர் கடந்த 2010-ம் வருடம் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று திருநெல்வேலி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்த சூழலில், நேற்று பணியில் இருந்த போது சுரேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

 அவரை சக போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

 இந்த சம்பவம் அவருடன் பணியாற்றி வந்த சக காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில், இதுகுறித்து சுரேஷ்குமாரின் உறவினர்களிடம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில், இன்று அவரது உடல் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

 முன்னதாக, சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்ட சுரேஷ்குமாரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, பணியின் போது உயிரிழந்த சுரேஷ்குமாரின் உடலுக்கு காவல் துறையினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

 அதனை தொடர்ந்து சுரேஷ்குமாரின் உடலானது நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இந்த நிகழ்வில், ஏராளமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்று சுரேஷ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியது காண்போர் நெஞ்சை கரைய வைத்தது.

 

Tags :

Share via