ஊராட்சிமன்ற உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி.

by Editor / 21-11-2022 09:42:46pm
ஊராட்சிமன்ற உறுப்பினர் தீக்குளிக்க முயற்சி.

தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லறைபுரவு ஊராட்சி மன்றத்தின் உடைய இரண்டாவது  வார்டு உறுப்பினராக இருப்பவர் மகேஸ்வரி.  இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.சில தினங்களுக்கு முன்பு இவர் சீட்டுப் பணத்தை அந்தப்பகுதியிலுள்ள பெண் ஒருவருக்கு வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. பணம் வாங்கி கொடுத்ததை கேட்டப்போது ஊராட்சி மன்றத்தலைவர் குமார் தூண்டுதலின் பேரில் மைதிலி,மாரி,சுமதி,மகேந்திரன்  ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர் மீது புகார் கொடுத்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று மகேஸ்வரி தன் குழந்தை களோடு தன்மீது பொய்யான புகார் கொடுத்திருப்பதாக கூறி ஆட்சித்தலைவர் அலுவ்லகத்தில்  மன்னென்னை ஊற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார் இதனை கண்ட போலீசார் அங்கு தயாராக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் குடங்களைக் கொண்டு வந்து இவர் மீது ஊற்றி இவரை தற்கொலை செய்ய விடாமல் தடுத்தனர் இதனைத் தொடர் அரசு மருத்துவமனைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணினை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்து சம்பவம் வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via